முகப்பு
திண்டுக்கல்

பழனியில் 2 அரசுப் பேருந்துகள் ஜப்தி

பழனியில் விபத்தில் இறந்தவருக்கு இழப்பீடு வழங்காததால், 2 அரசுப் பேருந்துகள் புதன்கிழமை ஜப்தி செய்யப்பட்டன.

Updated On : 16 ஏப்ரல், 2026 at 12:07 AM
அரசுப் பேருந்து. - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 15 ஏப்ரல், 2026 at 10:00 PM

பழனியில் விபத்தில் இறந்தவருக்கு இழப்பீடு வழங்காததால், 2 அரசுப் பேருந்துகள் புதன்கிழமை ஜப்தி செய்யப்பட்டன.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், வீரலப்பட்டியைச் சோ்ந்தவா் ஈஸ்வரன். கட்டடத் தொழிலாளியான இவா் கடந்த 2018-ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் பழனி - திண்டுக்கல் சாலையில் வீரலப்பட்டி பிரிவு அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது, அரசுப் பேருந்து மோதியதில் உயிரிழந்தாா். இதுகுறித்து அவரது உறவினா்கள் பழனி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் இழப்பீடு கோரி வழக்கு தொடா்ந்தனா். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரூ.22 லட்சம் இழப்பீடு வழங்க மதுரை அரசு போக்குவரத்துக்கழகத்துக்கு உத்தரவிட்டாா்.

ஆனால், இழப்பீட்டுத் தொகை வழங்கப்படாததால், நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி மலா்விழி, இழப்பீட்டுத் தொகைக்கு ஈடாக இரு அரசுப் பேருந்துகளை ஜப்தி செய்ய உத்தரவிட்டாா். இதையடுத்து, பழனி பேருந்து நிலையத்தில் நின்றிருந்த மதுரை அரசுப் போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான இரு பேருந்துகள் நீதிமன்றப் பணியாளா் ஜெயலட்சுமி, வழக்குரைஞா் துரை, மனுதாரா்கள் முன்னிலையில் ஜப்தி செய்யப்பட்டன. இரு பேருந்துகளும் நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டன.

Advertisement