மதுரை

வீட்டின் பூட்டை உடைத்து 19 பவுன் நகைத் திருட்டு

DIN

மதுரை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 19 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றதாக திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
  நாகமலை புதுக்கோட்டை என்ஜிஓ காலனி மலையன்நகரைச் சேர்ந்த ராஜாங்கம் மகன் சிவபாண்டி (47).  இவர் வீட்டைப் பூட்டி விட்டு குடும்பத்தினருடன் வெளியூரில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு சனிக்கிழமை சென்றார். பின்னர் அங்கிருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு உள்ளே சென்று பார்த்த போது பீரோவும் உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 19 பவுன் நகைகள் மற்றும் ரூ. 2 ஆயிரத்தை மர்ம  நபர்கள் திருடிச் சென்றிருந்தது தெரிந்தது.
 இதுகுறித்து நாகமலைபுதுக்கோட்டைபோலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

SCROLL FOR NEXT