கெமிக்கல் கம்பெனியில் பாய்லர் வெடித்ததில், மதுரையைச் சேர்ந்த இளைஞர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
மதுரை அழகர்கோவில் பொய்கைக்கரைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவரது மகன் கவியரசு (24). இவர், அப்பன் திருப்பதி பகுதியில் உள்ள கெமிக்கல் கம்பெனியில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு நிறுவனத்தில் இருந்த பாய்லர் வெடித்ததில், அதன் பாகங்கள் கவியரசின் தலையில் தாக்கியது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக அப்பன் திருப்பதி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.