உசிலம்பட்டியில் சட்ட விரோதமாக குடிநீர் உறிஞ்சிய20 மின் மோட்டார்கள் பறிமுதல்
உசிலம்பட்டியில் சட்ட விரோதமாக குடிநீர் உறிஞ்ச பயன்படுத்தப்பட்ட 20 மின் மோட்டார்களை நகராட்சி நிர்வாகத்தினர் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.
உசிலம்பட்டியில் சட்ட விரோதமாக குடிநீர் உறிஞ்ச பயன்படுத்தப்பட்ட 20 மின் மோட்டார்களை நகராட்சி நிர்வாகத்தினர் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.
உசிலம்பட்டி நகராட்சியில் 5 நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. அப்போது சட்ட விரோதமாக மின்மோட்டார்களை பயன்படுத்தி நீர் உறிஞ்சப்படுவதால் மற்ற பகுதிக்கு குடிநீர் சீராக செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. இதுபோன்ற புகார்கள் நகராட்சி ஆணையருக்கு வந்தது. இதையடுத்து, நகராட்சி ஆணையாளர் சுப்பையா உத்தரவின்
பேரில், பொதுப்பணி மேற்பார்வையாளர் கணேசன், பிட்டர் கதிரேசன் உள்ளிட்டோர் நகர் பகுதிகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கருக்கட்டான்பட்டி காலனி, மலையாண்டி தியேட்டர் பகுதிகளில் சட்டவிரோதமாக குடிநீர் உறிஞ்ச பயன்படுத்தப்பட்ட 20 மின்மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.