இம்பாக்ட் வீரர் விதி நீக்கப்பட வேண்டும்: சச்சின் டெண்டுல்கர்
ஐபிஎல் தொடரில் உள்ள இம்பாக்ட் வீரர் விதி நீக்கப்பட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் உள்ள இம்பாக்ட் வீரர் விதி நீக்கப்பட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் கடந்த 2023 ஆம் ஆண்டு இம்பாக்ட் வீரர் என்ற புதிய விதி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த விதியின் படி, ஒரு அணி பிளேயிங் லெவனில் உள்ள எந்த ஒரு வீரருக்குப் பதிலாகவும் ஏற்கனவே முடிவு செய்து வைக்கப்பட்ட 5 வீரர்களில் ஒருவரை ஆட்டத்தின் எந்த நேரத்திலும் களமிறக்கலாம்.
இந்த இம்பாக்ட் வீரர் விதிக்கு எதிராக ஏற்கனவே இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஹார்திக் பாண்டியா இருவரும் பேசியுள்ளனர். இம்பாக்ட் வீரர் விதி இந்திய கிரிக்கெட்டில் ஆல்ரவுண்டர்கள் உருவாவதற்கு இடையூறாக இருக்கும் என ரோஹித் சர்மா விமர்சித்திருக்கிறார். இந்திய அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான அக்ஷர் படேலும் இம்பாக்ட் வீரர் விதி தனக்குப் பிடிக்கவில்லை என்பதை தெரிவித்திருந்தார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், ஐபிஎல் தொடரில் உள்ள இம்பாக்ட் வீரர் விதி நீக்கப்பட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: தனிப்பட்ட முறையில் ஐபிஎல் தொடரில் உள்ள இம்பாக்ட் வீரர் விதி நீக்கப்பட வேண்டும் எனக் கூறுவேன். டி20 வடிவிலான ஆட்டங்களில் ஒரு அணி 20 ஓவர்கள் மட்டுமே விளையாடப் போகிறது. ஒவ்வொரு அணியிலும் உள்ள பேட்டிங் வரிசையில் கூடுதலாக ஒருவர் இம்பாக்ட் வீரராக களமிறங்கினால், பந்துவீச்சாளர்களுக்கு அது மேலும் சவாலளிக்கும் விஷயமாக மாறுகிறது. ஏற்கனெவே பந்துவீச்சாளர்கள் பல சவால்களை சந்தித்து வரும் நிலையில் இது மேலும் சவாலை ஏற்படுத்துகிறது. அந்த இடத்தில் ஆட்டத்தின் சமநிலை தவறுவதாக நினைக்கிறேன் என்றார்.
Former Indian cricketer Sachin Tendulkar has stated that the 'Impact Player' rule in the IPL should be removed.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.