முகப்பு
மதுரை

வீட்டில் தூங்கிய பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு

மதுரையில் வீட்டில் தூங்கிய பெண்ணிடம் 5 பவுன் சங்கிலியை அடையாளம் தெரியாத நபர்கள் பறித்துச்சென்றதாக திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Updated On : 25 டிசம்பர் 2018, 8:16 am IST
பகிர்:

மதுரையில் வீட்டில் தூங்கிய பெண்ணிடம் 5 பவுன் சங்கிலியை அடையாளம் தெரியாத நபர்கள் பறித்துச்சென்றதாக திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை தாசில்தார் நகர் கல்லூரணி தெருவைச் சேர்ந்த ராமச்சந்திரன் மனைவி காந்திமதி (70). இவர் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர் காந்திமதி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றார்.  இச்சம்பவம் தொடர்பாக காந்திமதி அளித்த புகாரின்பேரில் அண்ணாநகர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments