மருத்துவர் வீட்டில் 105 பவுன் நகைகள் திருட்டு ஓராண்டுக்கு பின் போலீஸார் வழக்குப்பதிவு
திருப்பரங்குன்றம் அருகே மருத்துவர் வீட்டில் நகை, பணம் திருடு போனது தொடர்பாக ஓராண்டுக்குப் பின் ஞாயிற்றுக்கிழமை திருநகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
திருப்பரங்குன்றம் அருகே மருத்துவர் வீட்டில் நகை, பணம் திருடு போனது தொடர்பாக ஓராண்டுக்குப் பின் ஞாயிற்றுக்கிழமை திருநகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
ஹாரிவிபட்டியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. மருத்துவர். இவரது வீட்டில் கடந்த 2017 ஜூன் மாதம் கண்காணிப்பு காமிரா பொருத்த வந்த ரவி, ரமேஷ் ஆகிய இருவரும் வீட்டில் இருந்த 105 பவுன் நகை மற்றும் ரூ.98 ஆயிரம் பணத்தை திருடிச்சென்று விட்டனராம்.
இதுகுறித்து அப்போது புகார் அளித்தபோது போலீஸார் புகார் ஏற்க மறுத்துவிட்டனராம். இந்நிலையில் மருத்துவர் மதுரை துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தன்பேரில் திருநகர் போலீஸார் ஓராண்டுக்குப்பின் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியது:
கடந்த ஓராண்டுக்கு முன் மருத்துவர் புகார் அளித்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணாகவும், சரியான முறையிலும் தெரிவிக்கவில்லை. இதனால் இந்த வழக்கு எடுத்துக் கொள்வதில் தாமதம் ஏற்பட்டது என்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.