மதுரை

உசிலம்பட்டி அருகே அரசுப் பேருந்து மோதி பாதயாத்திரை சென்ற பக்தர் சாவு

DIN

உசிலம்பட்டி அருகே திங்கள்கிழமை அரசு பேருந்து  மோதியதில் பழனிக்கு பாதயாத்திரையாக சென்ற பக்தர் உயிரிழந்தார்.
ராஜபாளையம் பகுதிலிருந்து 40-க்கும் மேற்பட்டோர்  பாதயாத்திரையாக பழனி முருகன் கோயிலுக்கு சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் ராஜபாளையம் அருகேயுள்ள வாகைக்குளம்பட்டியைச்சேர்ந்த மாரியப்பபிள்ளை மகன் கந்தவேல்(42) உசிலம்பட்டி அருகே பேரையூர் சாலை சமத்துவபுரம் அருகே திங்கள்கிழமை  அதிகாலை நடந்து சென்று கொண்டிருந்தார். 
அப்போது ராஜபாளையத்திலிருந்து தேனியை நோக்கி சென்று  கொண்டிருந்த அரசுப் பேருந்து கந்தவேல் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அதே பேருந்தில் கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கந்தவேல் உயிரிழந்தார். இது குறித்து உசிலம்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடல்நலம் பாதிக்கப்பட்ட காட்டு யானை உயிரிழப்பு

எக்காரணம் கொண்டும் உயா்கல்வியை கைவிடக் கூடாது: திருப்பத்தூா் ஆட்சியா்

கிழக்கு தில்லியில் உள்ள குடோனில் பிகாா் இளைஞா் சடலம்: ஒருவா் கைது

தேனீக்கள் கொட்டியதில் ஒருவா் உயிரிழப்பு: இருவா் காயம்

சுயமாக முன்னேற கல்வி மிகவும் அவசியம்

SCROLL FOR NEXT