முகப்பு
மதுரை

அனைத்து ஊராட்சிகளிலும் ஜன.26-இல் கிராம சபைக் கூட்டம்

மதுரை மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் வரும் சனிக்கிழமை (ஜன. 26) கிராம சபைக் கூட்டம் நடைபெறும் என

Updated On : 24 ஜனவரி 2019, 2:42 am IST
பகிர்:

மதுரை மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் வரும் சனிக்கிழமை (ஜன. 26) கிராம சபைக் கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
குடியரசுத் தினத்தன்று மதுரை மாவட்டத்தில் உள்ள 420 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெறும். ஊராட்சிகளால் மேற்கொள்ளப்பட்ட செலவினங்கள், நலத் திட்டங்கள், தனிநபர் பயன்பெறும் திட்டங்களுக்குத் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள், அரசால் தெரிவிக்கப்படும் முக்கிய விஷயங்கள் குறித்து பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு விவாதிக்கப்படும்.
ஒவ்வொரு கிராமத்தின் அடிப்படை வசதிகளின் தற்போதைய நிலை, அதில் சரிசெய்ய வேண்டியவை குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும். 
எனவே, அந்தந்த ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள், மகளிர் குழு உறுப்பினர்கள், 
தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தோர் கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.