மதுரை

மருத்துவரிடம் பணம் பறித்த  விசிக பிரமுகர் மீது வழக்கு

DIN

மதுரையில் கட்சிக்கு  நிதி தரமறுத்த மருத்துவரிடம் பணம் பறித்துச் சென்ற விசிக பிரமுகர் மீது போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிவு செய்தனர்.
மதுரை புதுநத்தம் சாலையில் மருத்துவர் ஜோன்ஸ்ராஜா தேவதம்பி(33) பல் மருத்துவமனை நடத்தி வருகிறார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை அதே பகுதியைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் மாமலைவாசன், பல் மருத்துவமனைக்கு சென்று மருத்தவரிடம் கட்சிக்கு நிதி வழங்குமாறு கேட்டுள்ளார்.
ஆனால், மருத்துவர் ஜோன்ஸ்ராஜா தேவதம்பி நிதி வழங்க மறுத்துள்ளார். இதையடுத்து அவரை மிரட்டி ரூ.5 ஆயிரத்தை மாமலைவாசன் பறித்துச் சென்றாராம்.  இதுகுறித்து மருத்துவர் அளித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனைத்து நிலைகளிலும் நிதி ஒதுக்குவதில் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது: கு. செல்வப்பெருந்தகை

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஹார்திக் பாண்டியாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது: முன்னாள் இந்திய வீரர்

கண்களால் இறுகப்பற்றும் சானியா!

சிறகில்லாத தேவதை...!

SCROLL FOR NEXT