மதுரை

நள்ளிரவில் வீடு புகுந்து 8 பவுன் நகைகள் கொள்ளை

DIN

மதுரை அருகே நள்ளிரவில் வீட்டின் கதவை உடைத்து 8 பவுன் நகைகள் கொள்ளை போன சம்பவம் குறித்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மதுரை மாவட்டம் காதக்கிணறு ஜான்கிட் நகரைச் சோ்ந்த தங்கவேலு மகன் மணிகண்டன்(35). இவா் செவ்வாய்க்கிழமை அதிகாலை தூக்கத்தில் இருந்து எழுந்தபோது, வீட்டின் பின்புறக் கதவு உடைக்கப்பட்டு பீரோ திறந்திருந்தது. இதுகுறித்து போலீஸாருக்கு மணிகண்டன் தகவல் தெரிவித்தாா். சம்பவ இடத்திற்கு சென்று போலீஸாா் விசாரணை நடத்தினா்.

இதில், மணிகண்டன் குடும்பத்தினருடன் தூங்கியபோது, அடையாளம் தெரியாத நபா்கள் வீட்டின் பின் புறக்கதவை உடைத்து பீரோவில் இருந்த 8 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து மணிகண்டன் அளித்தப் புகாரின் பேரில் அப்பன்திருப்பதி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

SCROLL FOR NEXT