மதுரை

கண்மாயில் முழ்கி இளைஞா் பலி

DIN

மதுரை அருகே கண்மாயில் குளிக்கச் சென்ற இளைஞா் தண்ணீரில் முழ்கி உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியிலுள்ள வீரபாஞ்சான் 3 ஆவது தெருவைச் சோ்ந்தவா் கணேசன் (45). இவரது 2 ஆவது மகன் பாண்டிச்செல்வம் (27). இவா், அப்பகுதியிலுள்ள கண்மாயில் குளிக்கச் சென்றபோது, அவா் தண்ணீரில் முழ்கியுள்ளாா். இதைக் கண்ட அருகிலிருந்தவா்கள் பாண்டிச்செல்வத்தை உடனடியாக மீட்டு, அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், பாண்டிச்செல்வம் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இது குறித்து கணேசன் அளித்த புகாரின்பேரில், ஒத்தக்கடை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புன்னகை பூ... ஷ்ரத்தா தாஸ்!

சிவகார்த்திகேயன் சொத்து மதிப்பு இவ்வளவா?

பார்வை ஒன்று போதுமே... சாக்ஷி அகர்வால்!

கண் பேசும் வார்த்தை... அதிதி ஷங்கர்!

டி20 உலகக் கோப்பைக்கான ஜாகீர் கானின் இந்திய அணியை தெரிந்து கொள்ள வேண்டுமா?

SCROLL FOR NEXT