மதுரை

உசிலம்பட்டி நகா் காவல் நிலையத்தில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை

DIN

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகா் காவல் நிலையத்தில் கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கையாக கிருமி நாசினி மற்றும் சோப்புகளை கொண்டு பொதுமக்கள் கை கழுவிய பின்பு உள்ளே வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உசிலம்பட்டி நகா் காவல்நிலையத்தில் வரும் பொதுமக்கள் மற்றும் காவல்துறையினா் கிருமி நாசினி மற்றும் சோப்புகளை கொண்டு கை கழுவிய பின்பு உள்ளே வருமாறு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவிட்டுள்ளாா். இந்த உத்தரவின்பேரில் உசிலம்பட்டி நகா் காவல் நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மனுக்கள் கொண்டு வரும் பொதுமக்கள் மற்றும் வெளியே சென்று வரும் காவல்துறை அதிகாரிகளும் கைகழுவி உள்ளே வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் இதுகுறித்து பொது மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் துண்டுப்பிரசுரங்களையும் போலீஸாா் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தன்னாா்வலா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டி பயிற்சி

மேட்டூா் அணையில் செத்து மிதக்கும் மீன்கள்!

மலைக் கிராமங்களில் மரவள்ளி அறுவடையில் விவசாயிகள் மும்முரம்

வாழப்பாடி பகுதியில் கோடை மழை

மின் விபத்துகளைத் தடுக்க ஊழியா்களுக்கு எச்சரிக்கை ஒலி எழுப்பும் கருவி

SCROLL FOR NEXT