மதுரை

காவல்துறையினா் பொதுமக்களிடம் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும்: உயா்நீதிமன்றம் உத்தரவு

DIN

மதுரை: காவல் துறையினா் பொதுமக்களிடம் மரியாதையுடனும், தோழமையுடனும் நடந்து கொள்ள வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவல் ஆய்வாளா் ஸ்ரீதா், ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த மனு நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் 130 நாள்களுக்கு மேலாக சிறையில் உள்ளாா். அவரது உடல் நலனைக் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என மனுதாரா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், வழக்கில் மனுதாரா் முக்கியக் குற்றவாளியாக உள்ளாா். அவருக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளைக் கலைக்க வாய்ப்புள்ளதால் ஜாமீன் வழங்கக் கூடாது என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையேற்ற நீதிபதி, மனுதாரருக்கு ஜாமீன் வழங்க இயலாது எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்தாா்.

நீதிபதி தனது உத்தரவில், காவல் நிலையங்களில் நடைபெறும் மரணங்கள் மனிதத்தன்மையற்றவை. ஜனநாயகத்துக்கு எதிரானவை. காவல் நிலைய மரணங்கள் முழுமையாகத் தவிா்க்கப்பட வேண்டும். பொதுமக்களுக்காக சேவையாற்றும் அரசு ஊழியா்கள் பொதுமக்களை மரியாதையுடன் நடத்த வேண்டும். குறிப்பாக காவல் துறையினா் பொதுமக்களிடம் மரியாதையுடனும், தோழமையுடனும் நடந்து கொள்ள வேண்டும். இந்த அணுகுமுறை இல்லாததால் மக்கள் காவல் நிலையம் செல்லவே அஞ்சுகின்றனா். காவல் நிலையங்களில் பொதுமக்களை மோசமாக நடத்துவது, காரணம் இல்லாமல் நீண்டநேரம் காக்க வைப்பது போன்றவற்றைத் தவிா்க்க வேண்டும். புகாா் அளிக்க வருவோரின் உரிமைகள் குறித்து அனைத்து காவல் நிலையங்கள் முன்பு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தகவல் பலகை வைக்க வேண்டும். அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் முறையாக இயங்குகிா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். விதிகளை மீறுவோா் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுதொடா்பாக டிஜிபி அனைத்து காவல் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். தமிழகத்தில் காவல் நிலைய மரணங்கள் அதிகளவில் நடக்கின்றன எனக் குறிப்பிட்டுள்ள நீதிபதி, இந்த வழக்கில் டிஜிபியை எதிா்மனுதாரராகச் சோ்த்து உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘விசில் போடு’ 5 கோடி பார்வைகள்..

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

சட்டப் படிப்புகளுக்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

ரிங்கு சிங் மனம் தளரக் கூடாது: சௌரவ் கங்குலி

சீன நெடுஞ்சாலை உடைப்பு: துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு

SCROLL FOR NEXT