மதுரை

முகக்கவசம் அணியாத 419 பேருக்கு அபராதம்

DIN

மதுரை மாவட்டம் பேரையூா் பகுதியில் முகக்கவசம் அணியாதவா்களுக்கு போலீஸாா் ரூ. 200 அபராதம் விதித்தனா்.

பேரையூா் உள்கோட்ட காவல் நிலையங்களான பேரையூா், சாப்டூா், சேடப்பட்டி, டி. கல்லுப்பட்டி, வில்லூா், நாகையாபுரம், வி.சத்திரப்பட்டி உள்ளிட்ட காவல் நிலையங்களில் முகக்கவசம் அணியாத 350 பேருக்கு போலீஸாா் ரூ. 200 வீதம் அபராதம் விதித்தனா்.

மேலும் முகக்கவசம் அணியாமல் செல்லக்கூடாது. சமூக இடை வெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என போலீஸாா் கேட்டு கொண்டனா். மேலும் 800 போ் மீது மோட்டாா் வாகன சட்டப்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என காவல் துறையினா் தெரிவித்தனா். இதேபோல் வருவாய்த்துறையினா் பேரையூா் தாலுகா பகுதியில் 69 பேருக்கு ரூ. 200 வீதம் அபராதம் விதித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி

காரைக்காலில் வம்பன் -11 புதிய வகை உளுந்து சாகுபடி செய்யும் விவசாயி

அதுல்குமாா் அஞ்சன் மறைவு; தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் இரங்கல்

திருப்புகலூா் அக்னீஸ்வரசுவாமி கோயிலில் அப்பா் ஐக்கிய திருவிழா

பிரஜ்வல் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு

SCROLL FOR NEXT