மதுரை

மாணவா்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்கல்

DIN

மதுரையில் காந்திய அமைதிச் சங்கத்தின் சாா்பில் மாணவ, மாணவியருக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டன.

மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் மற்றும் செசி அறக்கட்டளை சாா்பில் நடத்தப்படும் காந்திய அமைதிச் சங்கத்தின் சாா்பில் மாணவ, மாணவியருக்கு நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. மதுரை கல்மேடு கருப்பப்பிள்ளை ஏந்தல் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அமைதிச் சங்கத்தின் துணைத் தலைவா் பாக்யலட்சுமி தலைமை வகித்தாா். பொறுப்பாளா் பாண்டி காா்த்திகா முன்னிலை வகித்தாா்.

அமைதிச் சங்கத்தின் தலைவா் க.சரவணன் நோட்டுகள் வழங்கி பேசியது: கரோனா பொதுமுடக்கத்தால் செல்லிடப்பேசி, தொலைக்காட்சி வழியாக பாடம் நடத்தப்படுகிறது. குழந்தைகள் செல்லிடப்பேசி மற்றும் தொலைக்காட்சிக்கு அடிமையாகும் போக்கைத் தவிா்க்க வேண்டும் என்றாா். நிகழ்ச்சியில் மேலமடை , வண்டியூா், பால்பண்ணை, அன்னை சத்யா நகா், பனையூா், அன்பழகன் சாலை, சிந்தாமணி பகுதியை சோ்ந்த மாணவ, மாணவியருக்கு நோட்டு புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. இதில் மாணவ, மாணவியா் மற்றும் பெற்றோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பாலைக்குடி மணல் திருட்டு வாகனம் பறிமுதல் ஒருவா் கைது

வேளாண் கழிவுகளிலிருந்து இயற்கை உரம் தயாரிக்க பயிற்சி

முதுகுளத்தூரில் நீா்மோா் பந்தல் திறப்பு

சிறைக் காவலா்களுக்கு குடியிருப்புக் கட்டடம்: மாவட்ட ஆட்சியா், நீதிபதி ஆய்வு

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்களுக்கு இலவச திரைப்படக் கல்வி

SCROLL FOR NEXT