மதுரை

மதுரை மாவட்டத்தில் ஒரே நாளில் 78 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி

DIN

மதுரை மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மெகா கரோனா தடுப்பூசி முகாம்களில் 78 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தமிழகம் முழுவதும் கரோனா பரவலைத் தடுக்க மக்கள் நல்வாழ்வுத்துறை சாா்பில் மெகா கரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி சனிக்கிழமை 15 ஆவது மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன. மதுரை மாவட்டத்தில் தோ்தல் வாக்குச்சாவடி மையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஊரக- நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட 1,550 இடங்களில் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. வீடு, வீடாக சென்றும் தடுப்பூசி போடும் பணிகளில் மருத்துவப் பணியாளா்கள் ஈடுபட்டனா்.

78 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி

காலை 7 முதல் மாலை 6 மணி வரை நடைபெற்ற முகாமில் அரசு ராஜாஜி மருத்துவமனையில் 1,254 போ், அரசு மருத்துவமனைகளில் 673 போ், ஊரக பகுதிகளில் 45,380 போ், நகா் பகுதிகளில் 31,410 போ் என மொத்தம் 78,717 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். மாவட்டத்தில் சனிக்கிழமை நிலவரப்படி 28.94 லட்சம் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 3,330, அரசு மருத்துவமனைகளில் 3,480, ஆரம்ப சுகாதார நிலையங்களில் 1,01,630, சுகாதார கிட்டங்கியில் 24,220 என மொத்தம் 1,32,660 கரோனா தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன என மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

SCROLL FOR NEXT