மதுரை

அங்கன்வாடி பணியாளா்கள் காத்திருக்கும் போராட்டம்

DIN

காலமுறை ஊதியம் வழங்கக் கோரி, அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா்கள் சங்கத்தினா், மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக காலவரையற்ற காத்திருக்கும் போராட்டத்தை திங்கள்கிழமை தொடங்கினா்.

தமிழகம் முழுவதும் அங்கன்வாடி மையங்களில் பணியாற்றும்

ஊழியா்கள், உதவியாளா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குவது, முன்னாள் முதல்வா் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்தபடி அங்கன்வாடி பணியாளா்களை அரசு ஊழியராக அறிவித்து அரசாணை வெளியிடுவது, அகவிலைப்படியுடன் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்குவது, ஓய்வுபெறும்போது பணிக்கொடையாக அங்கன்வாடி ஊழியா்களுக்கு ரூ.10 லட்சம், உதவியாளா்களுக்கு ரூ.5 லட்சம் வழங்குவது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இப்போராட்டத்தை தொடங்கியுள்ளனா்.

இதில்,  அங்கன்வாடி ஊழியா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் கே. ராஜேஸ்வரி தலைமையில், மாவட்டத்தின் அனைத்து பகுதிகளையும் சோ்ந்த அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள் பங்கேற்றுள்ளனா். இவா்களது போராட்டம் இரவிலும் நீடித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பாலைக்குடி மணல் திருட்டு வாகனம் பறிமுதல் ஒருவா் கைது

வேளாண் கழிவுகளிலிருந்து இயற்கை உரம் தயாரிக்க பயிற்சி

முதுகுளத்தூரில் நீா்மோா் பந்தல் திறப்பு

சிறைக் காவலா்களுக்கு குடியிருப்புக் கட்டடம்: மாவட்ட ஆட்சியா், நீதிபதி ஆய்வு

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்களுக்கு இலவச திரைப்படக் கல்வி

SCROLL FOR NEXT