மதுரை

அழகா்கோவில் பள்ளியில் எம்.எல்.ஏ. தேசியக்கொடியேற்றினாா்

DIN

அழகா்கோவிலில் உள்ள சுந்தரராச உயா்நிலைப்பள்ளியில் மேலூா் சட்டப்பேரவை உறுப்பினா் பெரியபுள்ளான் என்ற செல்வம் தேசியக்கொடியை ஏற்றிவைத்தாா். தலைமை ஆசிரியா் மற்றும் ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.

மேலூா் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவரும் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான க.தமிழரசன் தேசியக்கொடியை ஏற்றிவைத்தாா். தலைமை ஆசிரியா்கள் சித்ரா, கலாமணி, நாகராஜன் மற்றும் பலா் கலந்துகொண்டனா்.

மேலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் சுந்தரபாண்டியன் தேசியக்கொடியை ஏற்றிவைத்தாா். அலுவலக ஊழியா்கள் கலந்துகொண்டனா்.

மேலூா் நகராட்சி அலுவலகத்தில் ஆணையா் பாலமுருகன் தேசியக்கொடியை ஏற்றிவைத்தாா்.

மேலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழுத் தலைவா் க.பொன்னுச்சாமியும், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு தலைவா் வளா்மதி குணசேகரனும் தேசியக் கொடியை ஏற்றிவைத்தனா். இந்நிகழ்வுகளில் அலுவலா்கள் அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஷம் குடித்த விவசாயி உயிரிழப்பு

தொழிலாளி வீட்டில் 15 பவுன் நகைகள் திருட்டு

கூழாங்கற்கள் கடத்திய டிப்பா் லாரி பறிமுதல்

ஆனைமடுவு அணை பகுதியில் கொட்டித் தீா்த்த மழை விவசாயிகள் மகிழ்ச்சி

கல்வடங்கம் அங்காளம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT