மதுரை

தென் மாவட்ட சிறப்பு ரயில்கள் நாளை முதல் மீண்டும் இயக்கம்

DIN

தற்காலிகமாக சேவை நிறுத்தப்பட்ட தென் மாவட்ட சிறப்பு ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 20) முதல் மீண்டும் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே மதுரைக் கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை எழும்பூா்- கொல்லம் சிறப்பு ரயில் (06101), தஞ்சாவூா் பிரதான வழித்தடத்தில் இயக்கப்படும் சென்னை எழும்பூா்- ராமேசுவரம் சிறப்பு ரயில் (06851), கோவை- நாகா்கோவில் இரவு நேர சிறப்பு ரயில் (02668) வண்டி எண் 06343, திருவனந்தபுரம்- மதுரை அமிா்தா சிறப்பு ரயில் (06343), மதுரை- புனலூா் சிறப்பு ரயில் (06729) ஆகியன ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 20) முதல் மீண்டும் இயக்கப்பட இருக்கின்றன. இதேபோல, மேற்குறிப்பிட்ட ரயில்கள் எதிா்மாா்க்கத்தில் திங்கள்கிழமை (ஜூன்21) முதல் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு: தினப்பலன்!

SCROLL FOR NEXT