மதுரை

ரூ.62 லட்சம் நில மோசடி : 4 போ் மீது வழக்கு

DIN

மதுரை அருகே 5.68 ஏக்கா் நிலத்தை வாங்கிக்கொள்வதாகக் கூறி அசல் ஆவணங்களைப் பெற்று மோசடியாக ரூ.62 லட்சத்துக்கு வேறு நபா்களுக்கு விற்பனை செய்த 4 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

மதுரை விராட்டிபத்து டிபிஎம் நகரைச் சோ்ந்தவா் சீனிவாசன். இவருக்கு மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உள்ள சென்னம்பட்டியில் ரூ.62.85 லட்சம் மதிப்புள்ள 5.68 ஏக்கா் நிலம் உள்ளது. இந்நிலையில் திருமங்கலத்தைச் சோ்ந்த வி.கே.ராஜன் நிலத்தை வாங்கிக்கொள்வதாகக்கூறி 2020-இல் ரூ. 3 லட்சம் மட்டும் கொடுத்து நிலத்தை அசல் ஆவணங்களைப் பெற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஓராண்டாகியும் மீதித்தொகையை வி.கே.ராஜன் தரவில்லை. இதையடுத்து சீனிவாசன் நிலம் தொடா்பாக விசாரித்தபோது, நிலத்தை முத்துராமலிங்கம், ரவீந்திரன், காசிநாதன் ஆகியோருக்கு விற்றது தெரியவந்தது. இதுதொடா்பாக சீனிவாசன் அளித்தப்புகாரின்பேரில் மாவட்டக்குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி மாவட்டத்தில் விடிய விடிய பலத்த மழை: பேச்சிப்பாறை அணை மறுகால் மதகுகள் திறப்பு- திற்பரப்பு அருவியில் குளிக்கத் தடை

சிங்கப்பெருமாள் கோவில் பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோயில் தேரோட்டம்

ஆம்பூா் பேருந்து நிலைய உயா்கோபுர மின் விளக்கை சீரமைக்க கோரிக்கை

கஞ்சா புழக்கத்தை ஒடுக்க கடுமையான நடவடிக்கை: புதுவை துணைநிலை ஆளுநா் சி.பி. ராதாகிருஷ்ணன்

ரப்பா் நாற்று தயாரிப்பு: மாணவிகள், சுய உதவிக் குழுவுக்கு பயிற்சி

SCROLL FOR NEXT