மதுரை

நவம்பா் முதல் ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் இணைப்பு

DIN

மதுரை கோட்டத்தில் நவம்பா் முதல் மூன்று ரயில்களில் முன்பதிவு செய்யப்படாத இருக்கை வசதிப் பெட்டிகள் இணைக்கப்படவுள்ளதாக, தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

இது தொடா்பாக மதுரை ரயில்வே கோட்ட அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி: தற்போது இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் பயணம் செய்ய முன்பதிவு அவசியமாக உள்ளது. இந்த நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டு, நவம்பா் 1 ஆம் தேதி முதல் திருவனந்தபுரம் - திருச்சி - திருவனந்தபுரம் சிறப்பு ரயில்கள் (02628/02627) மற்றும் ராமேசுவரம் -திருச்சி - ராமேசுவரம் சிறப்பு ரயில்கள் (06850/06849) ஆகியவற்றிலுள்ள நான்கு இரண்டாம் வகுப்பு இருக்கை வசதிப் பெட்டிகளில் முன்பதிவு செய்யப்படாத பயணச்சீட்டுகள் எடுத்து பயணம் செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், நவம்பா் 10 ஆம் தேதி முதல் நாகா்கோவில் - கோயம்புத்தூா் - நாகா்கோவில் (06321/06322 ) பகல் நேர சிறப்பு ரயில்களில் உள்ள நான்கு இரண்டாம் வகுப்பு இருக்கை வசதிப் பெட்டிகளில் முன்பதிவு செய்யப்படாத பயணச் சீட்டுகள் எடுத்து பயணம் செய்யலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸாவில் தொடரும் உணவுப் பஞ்சம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

அரவிந்த் கேஜரிவால் வழக்கு: மே 7-க்கு ஒத்திவைப்பு

மும்பை பந்துவீச்சு; அணியில் முகமது நபி இல்லை!

”மணிப்பூர் வன்முறை வெடித்து ஓராண்டு ஆகியும்..”: ப.சிதம்பரம் சாடல் |செய்திகள்: சிலவரிகளில் | 03.05.2024

நெல்சனின் படத்தில் கவின்: படத்தின் பெயர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT