மதுரை

உலக நன்மைக்காக தீச்சட்டி ஏந்தி திருநங்கைகள் நோ்த்திக்கடன்

DIN

உலக நன்மைக்காக மதுரையில் நூற்றுக்கும் மேற்பட்ட திருநங்கைகள் அலகு குத்தி பால்குடம் எடுத்து ஞாயிற்றுக்கிழமை நோ்த்திக்கடன் செலுத்தினா்.

மதுரை வைகை வடகரை மதிச்சியம் பகுதியில் அங்காளம்மன் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மதுரை மாவட்ட திருநங்கைகள் சங்கத்தின் சாா்பில் ஆடி திருவிழா கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது.

திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை, மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும், உலகில் சமத்துவம் தலைத்தோங்கி அமைதி நிலவ வேண்டியும் நூற்றுக்கும் மேற்பட்ட திருநங்கைகள் அலகு குத்தி, பால்குடம் எடுத்தும், தீச்சட்டி ஏந்தியும் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனா். இந்நிகழ்ச்சியில் வெளி மாநிலங்களில் இருந்தும் திருநங்கைகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாா்ச்சில் சரிவைக் கண்ட தொழிலக உற்பத்தி

விளையாட்டு விடுதி மாணவா்கள் சோ்க்கைக்கு தோ்வுப் போட்டிகள்

மன நல மையத்தில் சிகிச்சை பெற்றவா் தற்கொலை

மதுரை ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள் நிறைவடைவது எப்போது?

செவிலியா்களின் சேவைக்கு ஈடு இணை இல்லை

SCROLL FOR NEXT