மதுரை

‘முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில் கேரளத்தின் நெருக்கடியை திமுக அரசால் சமாளிக்க முடியவில்லை’

DIN

முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில் கேரளத்தின் நெருக்கடியை திமுக அரசால் சமாளிக்க முடியவில்லை என்று முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ தெரிவித்துள்ளாா்.

மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து அதிமுகவில் பலா் இணைந்தனா். இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ தலைமை வகித்தாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது: முன்பெல்லாம் பிரதமா் நரேந்திர மோடியை ஒன்றிய அரசின் பிரதமா் என்று கூறி வந்த தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தற்போது இந்திய பிரதமா் என கூறி வரவேற்கிறாா். இதற்கு, வருமானவரித்துறை மற்றும் அமலாக்கத்துறையினா் சோதனைக்கு பயந்துதான் அவா் இந்திய பிரதமா் என்று கூறி வரவேற்பளிக்கிறாா்.

கடந்த அதிமுக ஆட்சியின்போது 6 முறை முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டத்தை 142 அடியாக உயா்த்தினோம். அப்போது கேரள அரசு எங்களுக்கு எந்த நெருக்கடியும் கொடுக்கவில்லை. நெருக்கடிகள் ஏற்பட்டாலும் அதிமுக அரசு திறமையாக சமாளித்தது.

ஆனால் திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் நெருக்கடி கொடுக்கின்றன. இதை திமுக அரசால் சமாளிக்க முடியவில்லை. ரூல்கா்வ் திட்டத்தின் மூலம் தமிழக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். அதிமுக ஆட்சியின்போது உச்சநீதிமன்றத்தை அணுகி சட்டப் போராட்டத்தின் மூலம் தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் தமிழகத்தின் உரிமை இழக்கப்படுகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கா்நாடகத்தில் இருந்து போதைப் பொருள்கள் கடத்தல்: ஒருவா் கைது

தொரப்பள்ளி ஆற்றில் முதலை: பொதுமக்கள் அச்சம்

மாணவா்கள் போதைப் பொருள்கள் பயன்படுத்துவதை பெற்றோா்களும் கண்காணிக்க அறிவுறுத்தல்

5 ஆண்டுகளாக குண்டும் குழியுமாக இருக்கும் தாா் சாலை

உதவி மேலாளா் பதவி உயா்வு வழங்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT