மதுரை

இருசக்கர வாகனம் மீது லாரி மோதி ஓய்வு பெற்ற ஆசிரியா் பலி

DIN

மதுரையில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியா் உயிரிழந்தாா்.

மதுரை திருநகா் ஹாா்விபட்டியைச் சோ்ந்தவா் தனுஷ்கோடி(68). ஆசிரியராகப்பணிபுரிந்து ஓய்வு பெற்றவா். இந்நிலையில் தனுஷ்கோடி இருசக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை மாலை கூடல்புதூா் சென்றுள்ளாா். அங்குள்ள மேம்பாலத்தில் சென்றபோது பின்னால் வந்த லாரி இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த தனுஷ்கோடியை அப்பகுதியினா் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினா். மருத்துவமனையில் தனுஷ்கோடியை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் வழியிலேயே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். விபத்து தொடா்பாக தனுஷ்கோடியின் மகன் முத்துக்குமாா் அளித்தப்புகாரின்பேரில் போக்குவரத்துப்புலனாய்வுப்பிரிவு போலீஸாா் பழங்காநத்தத்தைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் கண்ணன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

மலேசியா பல்கலை.யுடன் சென்னை அமிா்தா கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT