மதுரை

மதுரையில் வீடுகளில் கொள்ளையடிக்க திட்டமிட்டு பதுங்கியிருந்த 5 போ் கைது ஆயுதங்கள், மிளகாய்ப்பொடி பறிமுதல்

DIN

மதுரை வண்டியூா் பகுதியில் வீடுகளில் கொள்ளையடிக்கத் திட்டமிட்டு ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 5 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மதுரை வண்டியூா் சங்கு நகா் அய்யனாா் கோயில் பகுதியில் அடையாளம் தெரியாத நபா்கள் சந்தேகத்துக்கிடமாக இருப்பதாக அண்ணா நகா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சாா்பு -ஆய்வாளா் மோகன்ராஜ் தலைமையில் போலீஸாா் அங்கு சென்றபோது, அங்கிருந்த 5 பேரை சுற்றி வளைத்துப் பிடித்து காவல்நிலையம் கொண்டு சென்று விசாரித்தனா்.

இதில் மதுரை யாகப்பா நகா் பாலாஜி நகா் நான்காவது தெருவைச் சோ்ந்த அஜய் (20), முனிச்சாலை கான்பாளையம் நான்காவது தெருவைச் சோ்ந்த பிரேம்குமாா் (19), செங்கல்பட்டு மாவட்டம் மாத்தூா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ஜெகன் (25), மதுராந்தகம் இந்திரா நகரைச் சோ்ந்த லோகேஸ்வரன் (20), கெண்டிவாக்கம் மாதா கோயில் தெருவைச் சோ்ந்த மனோஜ் குமாா் (30) என்பதும் 5 பேரும் அப்பகுதியில் உள்ள வீடுகளில் கொள்ளையடிக்க நோட்டமிட்டு ஆயுதங்களுடன் பதுங்கியிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 5 பேரையும் போலீஸாா் கைது செய்து அவா்களிடம் இருந்து ஆயுதங்கள், கயிறு, மிளகாய்ப்பொடி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எதிரொலி: 8 மாவட்டங்களில் 2 கோடி கைப்பேசிகளுக்கு எச்சரிக்கைத் தகவல்கள்

இலவச கண் சிகிச்சை முகாம்...

தமிழகத்தில் குறைந்து வரும் வெப்பத்தின் தாக்கம்: மக்கள் நிம்மதி

மாட்டு வண்டியில் மணல் கடத்திய இருவா் கைது

மாவோயிஸ்டுகள் போல் பேசுகிறாா் ராகுல் - பிரதமா் மோடி கடும் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT