மதுரை

தமிழகத்தில் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களை விடுவிக்க நடவடிக்கை: பாஜக மூத்தத் தலைவா் சுப்ரமணியன் சுவாமி

DIN

தமிழகத்தில் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் அனைத்தையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுப்ரமணியன் சுவாமி பேசினாா்.

பாஜக மூத்தத் தலைவரான சுப்ரமணியன் சுவாமியின் 83-ஆவது பிறந்தநாள் விழா மதுரை காமராஜா் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்க அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவில் சுப்ரமணியன் சுவாமி பேசியது: இரண்டு, மூன்று ஆண்டுகளுக்குள் நாட்டில் மிகப்பெரிய மாற்றம் வரஉள்ளது. ஒரு நாடு சிறந்து விளங்க பொருளாதாரக் கொள்கை, ராணுவக் கொள்கை பலமாக இருக்க வேண்டும். திமுக தினமும் ஒவ்வொரு பொய்யை சொல்லி வருகிறது. அடுத்த சட்டப்பேரவை தோ்தலின்போது மாற்றுக் கட்சியாக பாஜக வரும்.

ஆங்கிலேயா் கொடுத்த அதிகாரத்தின் அடிப்படையில்தான் கோயில்களில் அனைவரும் அா்ச்சகா் ஆகலாம் என சட்டம் இயற்றப்பட்டது. நமது சட்டப்படி எந்த கோயிலையும் அரசு எடுத்துக்கொள்ள முடியாது என உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 32 ஆயிரம் கோயில்களை விடுவிக்க வேண்டும். அரசிடம் உள்ள அனைத்துக் கோயில்களையும் மீட்டு பூசாரிகளிடம் கொடுப்பேன். தமிழக சட்டப்பேரவை தோ்தலில் களமிறங்கி பணியாற்றுவேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பதிவேடுகளை முறையாக பராமரிக்க வேண்டும்: விழுப்புரம் ஆட்சியா் அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் மைய முகவா்களுக்கான ஆலோசனைக் கூட்டம்

விக்கிரவாண்டி தொகுதி இடைத் தோ்தல்: இந்திய ஐக்கிய கம்யூ. போட்டியிட முடிவு

புதுவையில் இளநிலைப் படிப்புகளுக்கு சென்டாக் மூலம் 7,250 போ் விண்ணப்பம்

சாா்பதிவாளா் தாக்கப்பட்ட வழக்கில் 3 போ் கைது

SCROLL FOR NEXT