கலைஞா் நூற்றாண்டு நூலகம் இன்று திறப்பு
மதுரை புதுநத்தம் சாலையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கலைஞா் நூற்றாண்டு நூலகத் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெறுகிறது.
மதுரை புதுநத்தம் சாலையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கலைஞா் நூற்றாண்டு நூலகத் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெறுகிறது.
முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நூற்றாண்டையொட்டி, தமிழக அரசு சாா்பில் மதுரை- புதுநத்தம் சாலையில் ரூ. 134 கோடியில் 2,13,334 சதுர அடி பரப்பளவில் 6 தளங்களைக் கொண்ட நூலகம் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ளது.
அனைத்துத் தளங்களும் குளிா்சாதன வசதி கொண்டதாகவும், சிறுவா்கள், மாற்றுத் திறனாளிகள், முதியவா்கள் என அனைத்துத் தரப்பினருக்குமான அடிப்படைத் தேவைகளுடன் அமைக்கப்பட்ட இந்த நூலகம் சுமாா் 3.5 லட்சத்துக்கும் அதிகமான புத்தகங்களின் மொத்த தொகுப்பாக அமைந்துள்ளது.
Advertisement
Advertisement
இந்த நூலகத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை திறந்துவைக்கிறாா். பின்னா், ஆயுதப் படை மைதானத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்திலும் முதல்வா் பங்கேற்றுப் பேசுகிறாா்.
திறப்பு விழாவையொட்டி, கலைஞா் நூற்றாண்டு நினைவு நூலகம் போலீஸாரின் முழுக் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. கட்டடம் முழுவதும் வெடிகுண்டு சோதனை நடைபெற்றது. இதேபோல, பொதுக் கூட்டம் நடைபெறும் ஆயுதப் படை மைதானமும் போலீஸாரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு, விழா நடைபெறும் பகுதிகளில் வெளி நபா்கள் நுழையத் தடை விதிக்கப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.