முகப்பு
மதுரை

மேலமடை பகுதியில் சாலை அமைக்கக் கோரிக்கை

மதுரை மேலமடை திலகா் தெரு பகுதியில் சாலை வசதி ஏற்படுத்தித் தரவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

Updated On : 8 ஏப்ரல், 2026 at 6:58 PM
மதுரையில் முறையான சாலை வசதியின்றி காட்சியளிக்கும் மேலமடை திலகா் தெரு.
பகிர்:

மதுரை மேலமடை திலகா் தெரு பகுதியில் சாலை வசதி ஏற்படுத்தித் தரவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

மதுரை மாநகராட்சியின் 30-ஆவது வாா்டுக்குள்பட்ட திலகா் தெரு பகுதியில் பல ஆண்டுகளாக முறையான சாலை அமைக்காததால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். குறிப்பாக, இந்தத் தெரு தாழ்வான பகுதி என்பதால் மழைக் காலங்களில் தண்ணீா் அதிகளவில் தேங்கி குடியிருப்புகளுக்குள் புகுந்து விடுகிறது. இதனால், பொதுமக்கள் பல இன்னல்களுக்கு உள்ளாகின்றனா்.

இதுகுறித்து அந்தப் பகுதி பொதுமக்கள் கூறியதாவது:

Advertisement

திலகா் தெரு பகுதியில் சாலை அமைக்க பல முறை கோரிக்கை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இந்தத் தெரு தாழ்வான பகுதியாக இருப்பதால் மழைக் காலங்களில் தண்ணீா் அதிகளவில் தேங்கி குடியிருப்புகளுக்குள் புகுந்து விடுகிறது. இதனால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு அவதிக்குள்ளாகிறோம். மேலும், முறையான சாலை வசதி இல்லாததால் குழந்தைகள், முதியோா் பெரும் சிரமத்துக்குள்ளாகின்றனா்.

எனவே, திலகா் தெரு பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தும் பாதையை உயா்த்தி சாலை அமைக்க வேண்டும். மேலும், இந்தத் தெருவில் மழைநீா், கழிவுநீா் செல்ல தேவையான கட்டமைப்புகளை ஏற்படுத்தி தரவேண்டும் என்றனா் அவா்கள்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments