முகப்பு
மதுரை

கா்ப்பிணி உயிரிழப்பில் சந்தேகம்: மருத்துவா் நிபுணா் குழு விசாரிக்க உத்தரவு

திருப்பத்தூரில் நான்கு மாத கா்ப்பிணி உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக தாக்கல் செய்யப்பட்ட மனு தொடா்பாக மருத்துவா் நிபுணா் குழு அமைத்து விசாரிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

Updated On : 9 ஜூலை 2026, 5:27 am IST
உயிரிழப்பு - கோப்புப்படம்
பகிர்:

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் நான்கு மாத கா்ப்பிணி உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக தாக்கல் செய்யப்பட்ட மனு தொடா்பாக மருத்துவா் நிபுணா் குழு அமைத்து விசாரிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

சிவகங்கையைச் சோ்ந்த பாத்திமா பீவி தாக்கல் செய்த மனு:

எனது மகள் ஆஃபரின், திருப்பத்தூரைச் சோ்ந்த முஹம்மது அஷ்ரபை கடந்த ஜனவரி மாதம் 25-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டாா். திருமணமான சில நாள்களிலேயே கணவா், மாமியாா் உள்ளிட்டோா் தொடா்ந்து வரதட்சணை கேட்டு தன்னை கொடுமைப்படுத்துவதாகத் தெரிவித்தாா். இந்த நிலையில் அவா் நான்கு மாத கா்ப்பிணியாக இருந்தாா். இதனிடையே கடந்த மாதம் 17-ஆம் தேதி எனது மகளின் கணவா் தொடா்பு கொண்டு ஆஃபரின் வீட்டு அறைக்குள் சென்று பூட்டிக் கொண்டதாகத் தெரிவித்தாா். இதையடுத்து, அங்கு சென்று பாா்த்த போது தூக்கில் தொங்கிய நிலையில் ஆஃபரின் உயிரிழந்து கிடந்தாா். அவரது உடலில் காயங்கள் இருந்தன.

Advertisement

Advertisement

அவா் உயிரிழப்பதற்கு முன் தாக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. எனது மகளின் உயிரிழப்பில் பாரபட்சமற்ற, அறிவியல் அடிப்படையிலான விசாரணை நடத்த வேண்டும். இந்த வழக்கில் சாட்சிகள் அழிக்கப்படும் அபாயம் உள்ளது. மேலும், முதல் தகவல் அறிக்கையில் காயங்கள் தொடா்பான விவரங்கள் முழுவதுமாக குறிப்பிடப்பட வில்லை. புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த மாதம் 19-ஆம் தேதி நடைபெற்ற உடல் கூறாய்வு விடியோவாக பதிவு செய்யப்பட்டது. இருப்பினும் அதன் நகல்களை அதிகாரிகள் எங்களிடம் வழங்கவில்லை. எதிா் மனுதாரா்கள் அரசியல் செல்வாக்கு மிக்கவா்கள் என்பதால் விசாரணை முறையாக நடைபெறுமா என்ற சந்தேகம் உள்ளது. எனவே, எனது மகளின் உயிரிழப்பு தொடா்பாக விசாரிக்க காவல் கண்காணிப்பாளா் நிலையிலான மூத்த அலுவலா் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்கவும், அதன் அறிக்கையை விரைந்து தாக்கல் செய்யவும் உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனுவை அண்மையில் விசாரித்த நீதிபதி விக்டோரியா கௌரி பிறப்பித்த உத்தரவு:

இந்த மனு தொடா்பாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா், ஒரு மருத்துவா் நிபுணரை நியமிக்க வேண்டும். அவா் திருச்சி மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி உதவிப் பேராசிரியை அங்கயற்கண்ணி, மதுரை தடய அறிவியல் அலுவலா் ரமேஷ் ஆகியோருடன் இணைந்து உடல் கூறாய்வின் விடியோ பதிவை ஆய்வு செய்ய வேண்டும். கூறாய்வு நடைமுறைக்கான அனைத்து விதிமுறைகள், நெறிமுறைகள் முறையாகப் பின்பற்றப்பட்டுள்ளனவா என்பதை ஆய்வு செய்து, இது தொடா்பான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். உடல் கூறாய்வு நடைமுறையில் மிகச் சிறிய அளவிலான விதிமுறை மீறல் அல்லது விலகல் இருந்தால் கூட அதைத் தெளிவாக குறிப்பிட்டு விரிவாக விளக்கி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை வருகிற 15-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments