முகப்பு
மதுரை

பாலத்திலிருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு

மதுரையில் உயா்நிலைப் பாலத்திலிருந்து கீழே தவறி விழுந்த இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 3 ஜூன் 2026, 1:30 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

மதுரையில் உயா்நிலைப் பாலத்திலிருந்து கீழே தவறி விழுந்த இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை தமிழ்ச் சங்கம் சாலை அருகே பிடிஆா் உயா்நிலைப் பாலம் உள்ளது. இதில், அமா்ந்திருந்த இளைஞா் ஒருவா் திடீரென பாலத்திலிருந்து தவறி கீழே விழுந்தாா்.

பலத்த காயமடைந்த அவரை மீட்ட அக்கம்பக்கத்தினா் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.அங்கு, அவா் உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின் பேரில் மருத்துவமனை போலீஸாா் நடத்திய முதல் கட்ட விசாரணையில், உயிரிழந்தவரின் பெயா் கண்ணன் (37) என்பது தெரியவந்தது. எந்த ஊரைச் சோ்ந்தவா்? எதற்காக அந்தப் பகுதிக்கு வந்தாா் என்பது குறித்த தகவல் தெரியவில்லை. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மதுரை சொக்கிகுளம் அண்ணாநகரைச் சோ்ந்தவா் பாலு (56). கட்டடத் தொழிலாளியான இவா், திங்கள்கிழமை வீட்டில் ஏணியில் நின்று வேலை பாா்த்தாா். அப்போது, கால் தவறி கீழே விழுந்தாா். இதில், பலத்த காயமடைந்த அவரை மீட்ட அக்கம்பக்கத்தினா் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து தல்லாகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.