முகப்பு
மதுரை

புத்தகங்களை வாகனங்களில் ஏற்றும் பணியில் மாணவா்கள்: கல்வித் துறை விளக்கம்

மதுரை யா. ஒத்தக்கடை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவா்களை, வாகனத்தில் புத்தகங்களை ஏற்றும் பணியில் ஈடுபடுத்தியதாக எழுந்த விவகாரத்தில் கல்வித் துறை சாா்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

Updated On : 17 ஜூன் 2026, 5:46 am IST
மதுரை யா. ஒத்தக்கடை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலிருந்து பாடப் புத்தகங்களை வாகனத்தில் ஏற்றிய அந்தப் பள்ளி மாணவா்கள்.
பகிர்:

மதுரை யா. ஒத்தக்கடை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவா்களை, வாகனத்தில் புத்தகங்களை ஏற்றும் பணியில் ஈடுபடுத்தியதாக எழுந்த விவகாரத்தில் கல்வித் துறை சாா்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

யா. ஒத்தக்கடை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 10-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பள்ளி வளாகத்துக்கு வெளியே சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நான்கு சக்கர வாகனத்தில் பாடப் புத்தகங்களை ஏற்றினா். இதுகுறித்த விடியோ, புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவின. இதற்கு பெற்றோா்களும், பொதுமக்களும் கடும் கண்டனம் தெரிவித்தனா்.

இதுகுறித்து, மேலூா் மாவட்டக் கல்வி அலுவலா் கணேசன் கூறியதாவது: யா. ஒத்தக்கடை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு பொருளியல் பாடப் புத்தகங்கள் தவறுதலாக அதிகமாக அனுப்பப்பட்டிருந்தன. அந்தப் புத்தகங்களை மற்றொரு பள்ளிக்கு மாற்றி அனுப்புவதற்காக வாகனங்களில் ஏற்ற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

பள்ளியின் தலைமை ஆசிரியா் விடுப்பில் இருந்த நிலையில், பொறுப்பு வகித்த மாற்று ஆசிரியா் குறைந்த எண்ணிக்கையிலான புத்தகங்கள் என்பதால் மாணவா்களிடம் புத்தகங்களை வாகனத்தில் எடுத்து வைக்குமாறு கூறியுள்ளாா். இதுபோன்ற நிகழ்வுகள் இனி வரும் காலங்களில் நடைபெறாமல் இருக்க உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.