நீதிமன்றத்தில் ஆஜராகாத நில அளவையருக்கு பிடி வாரண்ட்
திருவாடானை அருகே கல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நடேசன் மனைவி சரசு. இவர் திருவாடானை நீதிமன்றத்தில் நிலம் சம்பந்தமாக கடந்த
திருவாடானை அருகே கல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நடேசன் மனைவி சரசு. இவர் திருவாடானை நீதிமன்றத்தில் நிலம் சம்பந்தமாக கடந்த 2012ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் திருவாடானை பிர்கா நிலஅளவையர் ராதிகாவை கடந்த மார்ச் 23ம்தேதி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. புதன்கிழமை வழக்கு விசாரணைக்கு வந்த போதும் அவர் ஆஜராகவில்லை. இது குறித்து வழக்கை விசாரித்த நீதிபதி இன்பகார்த்தி, நில அளவையர் ராதிகாவுக்கு பிடி ஆணை பிறப்பித்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தும் படி உத்தரவிட்டார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.