ராமேசுவரம் கோயிலில் உச்ச நீதிமன்ற நீதிபதி தரிசனம்
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் உச்ச நீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி திங்கள்கிழமை இரவு சுவாமி தரிசனம் செய்தார்.
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் உச்ச நீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி திங்கள்கிழமை இரவு சுவாமி தரிசனம் செய்தார்.
ராமேசுவரத்துக்கு திங்கள்கிழமை இரவு வந்த அவர் கோயிலுக்குள் சென்று சுவாமி மற்றும் அம்பாளை தரிசனம் செய்தார். மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ், வருவாய் கோட்டாசியர் சுமன், காவல்துறை ஏ.டி.எஸ்.பி. கண்ணன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். செவ்வாய்கிழமை காலை நீதிபதி இந்திரா பானர்ஜி ஸ்படிக லிங்க பூஜையின்போது தரிசனம் செய்ய உள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.