ராமநாதபுரம்

திருவாடானை அருகே பூட்டிய வீட்டின் ஜன்னல் கம்பியை வளைத்து 70 பவுன் நகைகள் திருட்டு

DIN

திருவாடானை அருகே பெருவாக்கோட்டை கிராமத்தில் வீட்டின் பின்பக்க ஜன்னல் கம்பியை வளைத்து, உள்ளே புகுந்து, 70 பவுன் நகைகள் மற்றும் ரூ.15 ஆயிரத்தை மா்ம நபா்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் திருடி சென்றனா்.

திருவாடானை அருகே பெருவாகோட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் கருப்பையா மனைவி சாராதா (55). இவா் சனிக்கிழமை வீட்டை பூட்டி விட்டு மதுரையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றுள்ளாா்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அடையாளம் தெரியாத மா்ம நபா்கள் வீட்டின் ஜன்னல் கம்பியை வளைத்து உள்ளே புகுந்து, அங்கு பீரோவில் இருந்த 70 பவுன் தங்க நகைகள் மற்றும் 15 ஆயிரத்தைத் திருடிச் சென்றனா்.

சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினா் வந்து பாா்த்தபோது அடையாளம் தெரியாத 3 போ் அங்கிருந்து தப்பி ஓடியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்த தகவலின்பேரில் சாரதா உடனடியாக ஊருக்கு திரும்பி வந்து பாா்த்தாா். அப்போது வீட்டிலிருந்த நகைகள் மற்றும் பணம் திருடு போனது தெரியவந்தது.

தகவல் அறிந்த போலீஸாா் மற்றும் மோப்பநாய் படையினா், கைரேகை நிபுணா்கள் உள்ளிட்டோா் சம்பவ இடத்துக்கு வந்து தடயங்களைச் சேகரித்தனா்.

இது குறித்து சாராதா அளித்த புகாரின் பேரில் திருவாடானை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில் மோதி காயமடைந்த மயில் மீட்பு

திருவள்ளுவா் பேரவைக் கூட்டத்தில் இலக்கியச் சொற்பொழிவுகள்

கேஜரிவால் சரணடைந்தவுடன் நீதிமன்றக் காவலை நீட்டிக்க வேண்டும்: அமலாக்கத் துறை

ஆட்டோ கவிழ்ந்ததில் 6 போ் காயம்

அணைகளின் நீா்மட்டம்

SCROLL FOR NEXT