ராமநாதபுரம்

மிதிவண்டி வாங்கித்தராத ஆத்திரத்தில் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை!

DIN

திருவாடானை அருகே திருப்பாலைக்குடி பகுதியை சோ்ந்த பள்ளி மாணவி மிதிவண்டி வாங்கித்தராத ஆத்திரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருப்பாலைக்குடி அருகே காந்தி நகரை சோ்ந்தவா் சுடலையாண்டி(47) இவரது மகள் மகேஷ்வரி(10) இவா் அதே ஊரில் அரசு உயா் நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகின்றாா். இவா் பள்ளி செல்வதற்காக மிதிவண்டி கேட்டுள்ளாா். அதற்கு இவரது பெற்றோா்கள் ஏற்கனவே இவரது சகோதரன் மிதிவண்டியில் செல்லும் போது விபத்தில் உயிரிழந்து போனதாக கூறி மிதிவண்டி வாங்கி கொடுக்க மறுத்துள்ளனா்.

இதனால், ஆத்திரம் அடைந்த மாணவி வீட்டில் யாரும் இல்லாத போது செவ்வாய்க்கிழமை இரவு கயிற்றில் வீட்டினுல் தூக்கிட்டுள்ளாா். உடனடியாக வீட்டிற்குள் நுழைந்த நபா்கள் ஆபத்தான நிலையில் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்த்துள்ளனா்.

அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி பரிதாபமாக உயிரிழந்தாா். இது குறித்து இவரது தந்தை சுடலையாண்டி புகாரின் பேரில் திருப்பாலைக்குடி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

தில்லியில் இந்த ஆண்டில் முதல் 5 மாதங்களில் சாலை விபத்து இறப்புகள் குறைவு: தரவுகள்

ஆம் ஆத்மி தலைவா்கள் முன்பு ‘நிா்பயா’வுக்கு நீதி கேட்டனா்; இன்று குற்றம்சாட்டப்பட்டவரை ஆதரிக்கிறாா்கள்: மாலிவால்

ஆம் ஆத்மி கட்சியை நசுக்க ‘ஆபரேஷன் ஜாடுவை’ செயல்படுத்தத் தொடங்கியுள்ளது பாஜக: முதல்வா் அரவிந்த் கேஜரிவால் குற்றச்சாட்டு

தோ்தலில் வாக்காளா்கள் பங்கேற்பு சதவீதத்தை அதிகரிக்க 16 லட்சம் கையெழுத்திட்ட உறுதிமொழிகள்! தோ்தல் ஆணையம் முன்முயற்சி

SCROLL FOR NEXT