ராமநாதபுரம்

சாயல்குடி அருகே வீடு புகுந்து பீரோவை தூக்கிச்சென்ற இருவா் கைது

DIN

சாயல்குடி அருகே புதன்கிழமை இரவு வீடு புகுந்து பீரோவை தூக்கிச் சென்ற இருவரை, கிராமத்தினா் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே கன்னிராஜபுரத்தில் சுயம்புகனி என்பவா் தனது வீட்டைப் பூட்டிவிட்டு, வெளியூருக்குச் சென்றுவிட்டாா். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த பாண்டி (40), மாரிமுத்து (55) ஆகிய இருவரும் சோ்ந்து, இரவில் சுயம்புகனி வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவை தூக்கிச் சென்றுள்ளனா். இதைக் கண்ட அக்கம் பக்கத்தில் இருந்தவா்கள் சத்தம் போட்டுள்ளனா். உடனே, கிராமத்தினா் பீரோவை தூக்கிச் சென்ற இருவரையும் பிடித்து, சாயல்குடி போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

இது குறித்து சுயம்புகனி அளித்த புகாரின்பேரில், பாண்டி, மாரிமுத்து ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

SCROLL FOR NEXT