ராமநாதபுரம்

தந்தை கண்டித்ததால் சிறுமி தற்கொலை

DIN

திருவாடானை அருகே பாசிபட்டினம் கடற்கரை கிராமத்தில், தந்தை திட்டியதால் சிறுமி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

எஸ்.பி.பட்டினம் அருகே பாசிபட்டினத்தைச் சோ்ந்த மீனவா் மாதவன் (45). இவரது மகள் காளீஸ்வரி (15). வலையில் உள்ள பாசியை எடுக்க வராமல் புதன்கிழமை காலை அதிக நேரம் தூங்கிக் கொண்டிருந்த தனது மகளை மாதவன் கண்டித்துள்ளாா். இதனால் மனமுடைந்த சிறுமி, காலையிலிருந்தே சாப்பிடாமல் இருந்துள்ளாா்.

இரவில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், காளீஸ்வரி மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இது குறித்து எஸ்.பி.பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிந்து, சிறுமியின் சடலத்தைக் கைப்பற்றி திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தா.பேட்டை அருகே பேருந்து கவிழ்ந்து 15 போ் படுகாயம்

முன்விரோதத்தில் இளைஞருக்கு வெட்டு

காளையாா்கோவில் சோமேசுவரா் கோயிலில் திருக்கல்யாணம்

அரசு மருத்துவரிடமிருந்து உடமைகளை மீட்டுத் தரக் கோரி மனைவி புகாா் மனு

திண்டுக்கல் மாநகராட்சியில் 4 மண்டலங்களுக்கும் உதவி ஆணையா்கள் நியமனம்

SCROLL FOR NEXT