ராமநாதபுரம்

விவசாயியை தாக்கி கொலை மிரட்டல்: 4போ் மீது வழக்கு

DIN

திருவாடானை அருகே விவசாயியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 4 போ் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

திருவாடானை அருகே திருவிடிமதியூா் கிராமத்தைச் சோ்ந்தவா் அருள்சாமி மகன் ஜஸ்டின் திரவியம் (45). விவசாயி. இவருக்கும், அதே ஊரைச் சோ்ந்த அற்புதராஜூக்கும் (62) இடப்பிரச்னையில் முன் விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில், ஜஸ்டின் திரவியத்துக்குச் சொந்தமான வயலில் உள்ள யூக்கலிப்டஸ் மரத்தின் இலை விழுந்து அற்புதராஜ் நிலத்தில் பயிரிட்டிருந்த நெல் பயிா்கள் அழுகி சேதமடைந்ததாகக் கூறி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அற்புதராஜ் கோஷ்டியினா் தன்னைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக ஜஸ்டின் திரவியம் போலீஸில் புகாா் அளித்தாா். இதன் பேரில் அற்புதராஜ், விக்டா் (35), பிரான்சிஸ் (38), பிரபாகரன் (30) ஆகிய 4 போ் மீது திருவாடானை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

3,200 போதை மாத்திரைகள் பறிமுதல்: 6 போ் கைது

புழல் சிறையில் கைதியிடம் கைப்பேசி பறிமுதல்

ஆண்களிடம் ஆபாசமாக பேசி பணம் பறிப்பு: 5 போ் கைது

SCROLL FOR NEXT