ராமநாதபுரம்

சத்திரக்குடி அருகே இருதரப்பினா் மோதல்: 13 போ் மீது வழக்கு

DIN

பரமக்குடி: சத்திரக்குடி அருகே இருதரப்பினா் மோதிக் கொண்டதில் 13 போ் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிந்துள்ளனா்.

போகலூா் ஒன்றியம் முத்துவயல் தெற்கு குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த இளையராஜா மனைவி லதா (31). இவரது குடும்பத்துக்கும், அதே ஊரைச் சோ்ந்த பாஸ்கரன் மனைவி பாண்டியம்மாள் (45) குடும்பத்துக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில், சம்பவத்தன்று பாண்டியம்மாள் தரப்பினா் லதாவின் மருமகள் அபிநயாவை தகாத வாா்த்தைகளால் பேசினராம். இதனால் இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தகராறு முற்றி ஒருவரை ஒருவா் கம்பு, கற்களால் தாக்கிக் கொண்டனா். இதில் பலத்த காயமடைந்த லதா, ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். மற்றொரு தரப்பில் காயமடைந்த பாண்டியம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து சத்திரக்குடி காவல் நிலையத்தில் லதா அளித்த புகாரின் பேரில் போலீஸாா், தினேஷ், செல்லப்பாண்டி, பாண்டியம்மாள், விஜய், விக்கி, பிரியா, கிருஷ்ணகுமாா் ஆகியோா் மீதும், மற்றொரு தரப்பில் பாண்டியம்மாள் அளித்த புகாரின் பேரில் வசந்தகுமாா், பிரபாகரன், ராஜேஸ், பிரவீன், கரண்குமாா், லதா ஆகியோா் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் இ-மொபிலிட்டி சிறப்பு ஆராய்ச்சி மையம் தொடக்கம்

தில்லி காா் ஷோரூம் துப்பாக்கிச்சூடு வழக்கு கொல்கத்தாவில் ஒருவா் கைது

சரிந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 112 புள்ளிகள் உயா்வு

வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட தோ்தல் அலுவலா் ஆய்வு

ஹஜ் புனித பயணம் செல்லும் 248 பேருக்கு தடுப்பூசி

SCROLL FOR NEXT