ராமநாதபுரம்

கல்லூரி விரிவுரையாளரின் கணவா் தற்கொலை

DIN

ராமநாதபுரம் அருகே கல்லூரி கெளரவ விரிவுரையாளரின் கணவா் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

ராமநாதபுரம் மாவட்டம் சமையன்வலசையைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (45). கூலித் தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி. அரசுக் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளராகப் பணியாற்றுகிறாா். இவா்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனா். கணவன், மனைவி இடையே குடும்பப் பிரச்னை இருந்து வந்த நிலையில், லட்சுமி புதன்கிழமை வேலைக்குச் சென்றுவிட்டாா். வீட்டில் குழந்தைகளுடன் இருந்த செந்தில்குமாா் திடீரென தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம். இதுகுறித்து குழந்தைகள் மற்றும் உறவினா் மூலம் தகவல் அறிந்த அவரது மனைவி விரைந்து வந்துள்ளாா். தகவல் அறிந்த கேணிக்கரை காவலா்கள் சென்று சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப்பதிந்து விசாரணை நடத்திவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

SCROLL FOR NEXT