முகப்பு
ராமநாதபுரம்

தொண்டியில் தொழிற்சங்கங்கள் சார்பில் சாலை மறியல் போராட்டம்: பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கைது 

திருவாடானை அருகே தொண்டியில் கட்டுமான தொழிற்சங்கங்கள் சார்பில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி

Updated On : 28 மார்ச் 2022, 12:54 pm IST
பகிர்:

திருவாடானை: திருவாடானை அருகே தொண்டியில் கட்டுமான தொழிற்சங்கங்கள் சார்பில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிழக்கு கடற்கரை சாலையில்  சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோரை கைது செய்து தனியார் மண்டபத்தில அடைத்து வைத்துள்ளனர்.

மத்திய-மாநில பொது நிறுவனங்கள், தொழில் அமைப்புசாரா பணியாளர்கள் ஆகியோர்கள் அறிவிக்கப்பட்ட அகில இந்திய பொது வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  திருவாடானை அருகே தொண்டியில் கிழக்கு கடற்கரை சாலையில் கட்டுமான தொழிலாளர்கள் சங்கம் சார்பில் அனைத்து தொழிற்சங்கம் கூட்டமைப்பு சார்பில் பாவோடி மைதானம் கிழக்கு கடற்கரை சாலையில் 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர். 

இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர்.

Advertisement

Advertisement

இதில் கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் S.A.சந்தனம் தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 38 பெண்கள் உள்பட 140 கட்டுமான தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். மாவட்டத் துணைத் தலைவர் நாகூர்பிச்சை, முடியப்பன் பான்டி மற்றும் கிளைநிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments