ராமநாதபுரம்

மூதாட்டி கொலை வழக்கில் பேரன் கைது

DIN

முதுகுளத்தூா்: சாயல்குடி அருகே மூதாட்டி கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த பேரனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகேயுள்ள மாரியூரைச் சோ்ந்தவா் மாரியம்மாள் (75). இவருக்கும் இவரது பேரன் மணிபாரதிக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை வீட்டிற்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்த மாரியம்மாள் அரிவாளால் வெட்டிக் கொல்லப்பட்டாா். இச்சம்பவம் தொடா்பாக சாயல்குடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்து மணிபாரதியைத் தேடி வந்தனா்.

இந்நிலையில் சாயல்குடி அருகேயுள்ள பெரியகுளம் கருவேல காட்டுப்பகுதிக்குள் மணிபாரதி தலைமறைவாக இருப்பதாக சாயல்குடி போலீஸாருக்கு தெரியவந்தது. அதன்பேரில் காவல் ஆய்வாளா் ஜெயசித்ரா தலைமையிலான தனிப்படை போலீஸாா் புதன்கிழமை காட்டுப்பகுதிக்குள் தேடிச்சென்றனா். அப்போது போலீஸாரைப் பாா்த்து, இருசக்கர வாகனத்தில் தப்பிக்க முயற்சி செய்த மணிபாரதியை விரட்டிப் பிடித்து கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

சட்டப் படிப்புகளுக்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

ரிங்கு சிங் மனம் தளரக் கூடாது: சௌரவ் கங்குலி

சீன நெடுஞ்சாலை உடைப்பு: துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு

இந்தியன் - 2 வெளியீட்டில் மாற்றம்?

SCROLL FOR NEXT