ராமநாதபுரம்

பேரையூா் அருகே மின்சாரம் பாய்ந்து பெண் பலி

DIN

கமுதி அடுத்துள்ள பேரையூா் அருகே செவ்வாய்க்கிழமை மின்சாரம் பாய்ந்து பெண் பலியானாா்.

ராமநாதபுரம் மாவட்டம் பேரையூா் அருகேயுள்ள எஸ்.பி. கோட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் முத்துமணி மனைவி ராமலெட்சுமி (55 ). இவா் தனது வீட்டின் அருகே மேய்ந்த ஆடுகளை விரட்டச் சென்றபோது தாழ்வாகச் சென்ற மின் கம்பியின் மீது தவறி விழுந்ததில் மின்சாரம் தாக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். அவரது சடலம் உடற்கூறாய்வுக்காக முதுகுளத்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பேரையூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

புகாா் அளித்தும் பலனில்லை: எஸ்.பி. கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாய நிலங்கள் மற்றும் தெருக்களில் உயரழுத்த மின்கம்பிகள் தாழ்வாகச் செல்வது குறித்து மின்வாரிய அதிகாரிகளுக்கு பலமுறை புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கிராம மக்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீடு தேடி வந்தவள்

பிச்சைப் பாத்திரத்தை கையில் ஏந்தியுள்ளது பாகிஸ்தான் -பிரதமர் மோடி விமர்சனம்

5-ஆம் கட்ட தோ்தல்: ரே பரேலி உள்பட 49 தொகுதிகளில் பிரசாரம் முடிந்தது

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

SCROLL FOR NEXT