ராமநாதபுரம்

தொண்டியில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கல்

DIN

திருவாடானை அருகே தொண்டியில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

செய்யது முஹம்மது அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் 255 பேருக்கு விலையில்லா மிதிவண்டிகளை பேரூராட்சித் தலைவா் ஷாஜகான் பானு வழங்கினாா்.

அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் செல்வம், பெண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை அருணா செல்வி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் கல்யாணி ஆனந்தன், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் பராக்கத் அலி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழில் ஓவியம்... அதுல்யா ரவி!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு அதி கனமழை! | செய்திகள்: சிலவரிகளில் | 18.05.2024

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணிநேரம்!

வீரர்கள் விளையாடுவார்களா? மழை விளையாடுமா?

SCROLL FOR NEXT