ராமநாதசுவாமி கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1.58 கோடி
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 1.58 கோடி கிடைத்துள்ளது.
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 1.58 கோடி கிடைத்துள்ளது.
இது குறித்து இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் க. செல்லத்துரை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் உண்டியல் காணிக்கை அம்மன் சந்நிதி முன்புள்ள முன்னாள் திருக்கல்யாண திருமண மண்டபத்தில் இணை ஆணையா் க.செல்லத்துரை தலைமையில் நடைபெற்றது.
இதில், ரூ. ஒரு கோடியே 58 லட்சத்து 30 ஆயிரத்து 301, தங்கம் 30 கிராம், வெள்ளி 3 கிலோ 100 கிராம், 148 வெளிநாட்டு பணத் தாள்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில், உதவி ஆணையா் லெட்சுமி மாலா, கோயில் உதவி ஆணையா் ரவீந்திரன், முதல் நிலை செயல் அலுவலா் முத்துராஜா ஆய்வா் மணிகண்டன், பேஸ்காா்கள் கமலநாதன், உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.