சிவகங்கை

கள்ளக்காதல் பிரச்னையில் மோதல்: சிவகங்கை அருகே வீடுகள் சூறை

DIN

சிவகங்கை அருகே உள்ள தமாறக்கி தெற்கு கிராமத்தில் வியாழக்கிழமை  கள்ளக்காதல் பிரச்னையில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் வீடுகள் சூறையாடப்பட்டன.
தமறாக்கி தெற்கு கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், அதே கிராமத்தைச் சேர்ந்த வேறொரு சமூகத்தை சேர்ந்த திருமணமான இளம்பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தராம்.  அவர்கள் இருவரையும் கடந்த சில தினங்களுக்கு முன் காணவில்லையாம். 
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் சிவகங்கை தாலுகா 
காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து,தேடி வந்துள்ளனர்.ஆனால் இதுவரை இருவர் குறித்து எந்த தகவலும் இல்லாததால், ஆத்திரமடைந்த ஒரு தரப்பினர் இளைஞரின் வீடு அமைந்நிருக்கும் மற்றொரு தரப்பினரின் பகுதிக்குள் வியாழக்கிழமை புகுந்து ஏராளமான வீடுகளில் இருந்த பொருள்கள், டிவி, பைக் உள்ளிட்ட பல லட்சம் மதிப்பிலான பொருள்களை சேதப்படுத்தினர். 
இதுகுறித்து தகவலறிந்த சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.ஜெயச்சந்திரன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் என்பதால் அந்த பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT