சிவகங்கை

செப்.28-இல் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்

DIN

சிவகங்கையில் இம்மாதம் 28 ஆம் தேதி விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.
இது குறித்து  மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சி.கே.சர்மிளா (விவசாயம்) புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் வரும் 28 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணியளவில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் அனைத்துத் துறை உயர் அலுவலர்களும் கலந்து கொள்ள உள்ளனர். சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த குறைகளை மனு மூலமாகவும், நேரடியாகவும் தெரிவிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனுபமா பரமேஸ்வரனின் புதிய பட அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 104 நீதிபதிகள் இடமாற்றம்!

பகலறியான் படத்தின் டீசர்

கௌதம் கம்பீர் ஸ்டைலில் விளையாடுகிறோம்: ஹர்ஷித் ராணா

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவருக்கு நேர்ந்த சோகம்!

SCROLL FOR NEXT