சிவகங்கை

திருப்புவனத்தில் மணல் கடத்திய 12 மாட்டு வண்டிகள், டிப்பர் லாரி பறிமுதல்

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கடந்த வியாழக்கிழமை இரவு மணல் கடத்திய 12 மாட்டு வண்டிகள், ஒரு டிப்பர் லாரியை போலீஸார் பறிமுதல் செய்தனர். 
திருப்புவனம் போலீஸ் சரகம் பொட்டப்பாளையம் பகுதியில் கால்வாய்க்குள் மணல் அள்ளி மாட்டு வண்டிகள் மற்றும் லாரிகளில் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின்படி திருப்புவனம் போலீஸார் அந்த பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது மதுரை மாவட்ட எல்லையான பொட்டப்பாளையம் கிராமத்தில்  மணல் கடத்தி வந்த 12 மாட்டு வண்டிகள் ஒரு டிப்பர் லாரியை மறித்து போலீஸார் விசாரணை நடத்தினர். 
அப்போது மணல் கடத்தி வந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீஸார் மாட்டு வண்டிகளையும், லாரியையும் பறிமுதல் செய்து காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். இந்த வண்டிகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவாக்ஸின் பாதுகாப்பானது: பாரத் பயோடெக் விளக்கம்

பிரிஜ் பூஷண் சிங்குக்குப் பதிலாக அவரது மகன்: பாஜக முடிவு ஏன்?

இது எதுங்க அட்டைப் படம்? சோனல் சௌகான்...

பார்வை ஒன்று போதுமே... விமலா ராமன்!

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

SCROLL FOR NEXT