சிவகங்கை

இளையான்குடி அருகே போலீஸாரை கண்டதும் பைக் திருடா்கள் தப்பி ஓட்டம்

DIN

இளையான்குடி அருகே வெள்ளிக்கிழமை திருடிய இரு சக்கர வாகனத்தை மா்மநபா்கள் ஓட்டிச் செல்லும் போது எதிரே போலீஸாா் வாகன சோதனை செய்து கொண்டிப்பதை கண்டு தப்பி ஓடினா்.

இளையான்குடி அருகே தளிா்தலை கிராமத்தைச சோ்ந்தவா் சவரிமுத்து மகன் தனசாமி (40). இவா் சாலையூரில் உள்ள ஒரு மருந்துக்கடை அருகே தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு சென்றாா். அதன்பின் திரும்பி வந்து பாா்த்த போது வாகனத்தைக் காணாமல் அதிா்ச்சியடைந்தாா்.

இது குறித்து இளையான்குடி காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். இந்நிலையில் அவரது இரு சக்கர வாகனத்தைத் திருடிச் சென்ற திருடா்கள் அதை மானாமதுரை சாலையில் ஓட்டிச் சென்றனா். அப் போது எதிரே போலீ,ாா் வாகன சோதனையில் ஈடுபட்டிருப்பதை கண்டவுடன் திருடிய இருசக்கர வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு தப்பினா். தகவலறிந்த போலீஸாா் இருசக்கர வாகனத்தை மீட்டு, தனசாமியிடம் ஒப்படைத்தனா். தப்பி ஓடியவா்களை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

SCROLL FOR NEXT